ஜேஷ்டா அஷ்டமி என்றால் என்ன?

ஆன்மிக தகவல்கள்

What is jeshda ashtami

ஜேஷ்டா என்பது மகாலட்சுமியின் மூத்த சகோதரி. ஆவணி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை அஷ்டமி நாள்தான் ஜேஷ்டா அஷ்டமி என்று பெயர். அன்றைய தினம் இருக்கும் விரதத்திற்கு பெயர் ஜேஷ்டா விரதம் என்று பெயர். மனதை வாட்டி வதைக்கும் துக்கத்தை போக்க இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். இது பெரும்பாலும் கேட்டை நட்சத்திரம் இருக்கும் நாளில் வரும். அல்லது அந்த நட்சத்திரத்தை யொட்டிய நாளில் வரும். கேட்டை நட்சத்திரத்திற்கு முந்தைய அஸ்தம் நட்சத்திர நாளில் ஜேஷ்டா தேவியை ஆவாகனம் செய்ய வேண்டும். கேட்டை நட்சத்திர நாளில் வழிபாடு நடத்த வேண்டும். மறுநாள் மூலம் நட்சத்திர நாளில் அதை தண்ணீரில் கரைக்க வேண்டும். குழந்தையை பறிகொடுத்தவர்கள், கருக்கலைந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் கவலை மறைந்து மகிழ்ச்சிக்கான சூழ்நிலை பிறக்கும்.