திருவாரூருக்கு அருகில் ஏமப்பேரூரில் நமிநந்தியடிகள் என்பவர் பிறந்தார். அவர் திருவாரூர் கோவிலில் உள்ள அரநெறியப்பர் சன்னதியில் உள்ள சிவனுக்கு தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வந்தார். இந்த சன்னதி திருவாரூர் கோவிலின் இரண்டாவது சுற்றில்தென்புறம் உள்ளது. இங்குள்ள சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஒருநாள் விளக்கு ஏற்ற நெய் கிடைக்காததால் நமிநந்தியடிகள் சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தண்ணீரை ஊற்றி விளக்கு எரித்தார்.
