பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி(தேய்பிறை) நாளில்தான் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்தார். ஆனால் அன்றைய தினம் திரயோதசி திதி மாலை 24 நாழிகைக்கு மேல் 30 நாளிகைக்குள் திரயோதசி திதி இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்த மே மாதம் 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் மச்ச அவதாரம் எடுத்த நாள் வருகிறது. மச்ச ஜெயந்தியான அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவது நல்லது.
