பங்குனி மாதம் வரும் வளர்பிறை நவமி திதியை நாம் ராமநவமியாக கொண்டாடுகிறோம். ராம பிரான் அவதரித்த அந்த நாளில் நாம் அவரை வணங்& கினால் நற்பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டுராமநவமி 2&4&2020 வியாழக்கிழமை அன்று வருகிறது.
ராமநவமியான ஏப்ரல் 2&ந் தேதி மதியம் வரை உணவு உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பின்னர் ராம பக்தரையோ, பெருமாள் கோயில் அர்ச்சகரையோ அழைத்து ராமபிரானுக்கு பூஜை நடத்த வேண்டும். “ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற மந்திரத்தை 48 முறை சொல்லி வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் ராம பக்தருக்கு அல்லது அர்ச்சகருக்கு வெள்ளை வஸ்திரம் கொடுத்து அவர் களுடன் உணவு உண்ண வேண்டும். மேலும் உறவினர் களையும் அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.
இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் சகல நன்மைகளையும் பெறுவார்கள். இந்த விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு நற்பலனை பெறலாம். குறிப்பாக நவமி திதியில் பிறந்தவர்களும், புனர்பூசம் நடத்திரத்தில் பிறந்தவர் களும் இந்த மேற்கொள்வது சாலச்சிறந்தது.
பொதுவாக நவமி திதிக்கு உரிய தேவதை துர்க்கை ஆகும். எனவே அன்றை தினத்துக்கு தேவி தமனம் என்றும் பெயர். அன்று துர்க்கைக்கு மரிகொழுந்து கொண்டு பூஜை செய்து வழிபட்டால் சந்திரதோஷம் விலகும்.
