வண்ணக் கோலங்களுடன் லட்சுமி பூஜை

இன்றைய & நாளைய சிறப்புகள்


மாசி மாத அமாவாசைக்குப்பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் பஞ்சமி திதியை ரங்க பஞ்சமி என்று அழைப்பார்கள். ரங்க என்றால் வர்ணம் என்று பொருள். அன்றைய தினம் வீடுகளில் பல வண்ணங்களால் கோலம் போட்டு லட்சுமி பூஜை செய்யலாம். இதனால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் இன்று ஆதிஷேசனுடன் கூடிய பெருமாள், வாசுகி, தட்சன், கார்கோடகன, பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகிய அஷ்டகுல நாகர்களை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும். இந்த சிறப்புக்குரிய நாள் ஏப்ரல் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.