புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது, அதற்கு ஒப்பானதுதான் வசந்த நவராத்திரி. இது பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி வசந்த நவராத்திரி தொடங்குகிறது. இதனை மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
