பிரதோஷம் புராண வரலாறும் வழிபாட்டு முறையும்

ஆன்மிக தகவல்கள்

Pradosham Purana History and Worship

பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை வரும். வளர்பிறை மற்றும் தேய் பிறை நாட்களில் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
தேவர்களுக்கும், அசுரர்களும் நடந்த போரில் தேவர்கள் பலர் மடிந்தனர். இதனால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். அப்போது மகாவிஷ்ணு பாற்கடலை கடைந்து அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணம் இருக்காது என்று கூறினார்.
ஆனால் தேவர்கள் மட்டும் நினைத்தால் பாற்கடலை கடைய முடியாது. இதனால் அசுரர்களை ஏமாற்றி பாற்கடலை கடைய அழைத்தார்கள். அதன்படி மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு காற்கடலை கடைந்தனர்.
அந்த நேரத்தில் மத்தாகிய மேருமலை மண்ணுக்குள் பதிந்தது. உடனே மகாவிஷ்ணு ஆமையாக மாறி அந்த மத்தை தாங்கினார். அதன்பின் கடையும் போது கயிறாக இருந்த பாம்பு வலி தாங்காமல் விஷனத்தை கக்சியது.

அந்த ஆலகால விசம் உலகில் பரவினால் அனைத்து மக்களும் இறந்து போவார்க்ள. எனவே சிவபெருமான், ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்தார். அதன்பின் அமிர்த்தம் கிடைத்தது.
ஆலகால விசத்தை சிவபெருமான் உண்ட நாள்தான் திரயோதசி திதி. அது ஒரு சனிக்கிழமை.
மாதந்தோறும் இருமுறை வரும் பிரதோஷத்தன்று சிவபெருமானை நந்தி மூலமாக வணங்குகிறோம். அதுவும் பிரதோஷம் சனிக்கிழமைகளில் வந்தால் அது சனி மகா பிரதோஷமாக மேலும் சிறப்படைகிறது.
பிரதோஷத்தன்று சிவபெருமான நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று நடனமாடுவதாக ஐதீயம். எனவேதான் அன்று நந்திக்கு சிறப்பு பூஜை செய்கிறோம்.

பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் காண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

வலம் வருதல் எப்படி?

சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோம சூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.

சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சனிப் பிரதோஷ நேரத்தி எல்லா தேவர்களும் சிவ பெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோச நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.