Worship on the day of the sharp incarnation can bring mental courage
13/6/2022
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம். சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் மனம் ஒடிந்து போனால் வாழ்க்கையில் எதையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் நம்மில் பலர் பலவீனமானவர்களாகத்தான் இருக்கிறோம். அவர்கள் மனத்தைரியத்தை வரவழைக்க கூர்ம அவதாரம் எடுத்த பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் கூர்ம அவதாரம் ஏன் எடுத்தார்-?
தேவர்கள் அசுரர்களுடன் சேர்ந்து அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்தார்கள். அவர்கள் மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது மத்தான மேருமலை கடலில் பதிந்து விட்டது. இதனால் வேதனை அடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவை வேண்டினார்கள். மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்குள் புகுந்தார். மேருமலையை சற்று தூக்கி அதன் அடியில் இருந்துகொண்டார். இதனால் எளிதாக பாற்கடலை கடைய முடிந்தது.
மகாவிஷ்ணு இப்படி கூர்ம அவதாரம் எடுத்தது ஜேஷ்ட பகுள துவாதசி திதி நாளில். அதவாது வைகாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் தேய்பிறை துவாதசி நாளில் ஆமையாக வந்தார். இந்த நாள் ஜூன் 25&ந் தேதி சனிக் கிழமை வருகிறது. அன்று காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் எதையும் தாங்கும் இதையம் பெறலாம். கோவில் சிற்பங்களில் கூர்ம அவதார காட்சி இடம் பெற்றிருந்தால் அந்த இடத்தில் வணங்குவதும் சிறப்பு. வீட்டிலும் கூர்ம அவதார படத்தை வைத்து பூஜித்தாலும் திடகார்த்தமான மனதை பெறலாம்.
அன்று மாலை பிரதோஷம். எனவே சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும்.