குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-மிதுனம்

சிறப்பு ராசி பலன்

Guru peyarchi Palankal 2023/ mithunam/Gemini

சீரிய சிந்தனையும்,நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! யார்தயவும் இன்றி சொந்த -காலில்நின்று முன்னேற நினைப்பீர்கள். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக அமையும். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மீன ராசியில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்து கொண்டிருந்தார். அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் இப்போது குருபகவான் 11-ம் இடமான மேஷராசிக்கு வந்து உள்ளார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர்11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார்.குரு வக்ரத்தில் சிக்கும் போது அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கிய கிரகங்களில் சனிபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகி இருக்கும். இந்த நிலையில் சனி பகவான் 20-12-2023 அன்று 9-ம் இடமான கும்ப ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு போல் கெடுபலனை தரமாட்டார். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம், எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும்.அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.
நிழல் கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மேஷத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும்.பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர் 8-10-2023அன்று உங்கள் ராசிக்கு 10-ம் இடமான மீனத்திற்கு செல்வது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் பொருள் இழப்பையும், சிறுசிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார்.
கேது தற்போது 5-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில்அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினை -யை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். உடல் நலப்பாதிப்பையும், பிள்ளைகளால் பிரச்சினை -யையும் தரலாம்.ஆனால் இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பாகஅமைந்துஉள்ளது.அவர் 8-10-2023அன்று 4-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். அவரால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலம் பாதிப்பு வரலாம்.வயிறு பிரச்சினை வரும்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
குரு ராகு சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளை தருவார்கள். அதன் மூலம் துணிச்சல் பிறக்கும். பண வரவு இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
இந்த காலத்தில் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். ராகு பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத பலனை எதிர்பார்க்கலாம். குருவால் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும் பதவிஉயர்வு, சம்பளஉயர்வுக்கு தடை ஏதும் இல்லை. சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதேபெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆசிரியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் தகுந்த நேரத்தில் உதவுவார்கள். மருத்துவர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்ற -மான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும்.வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
வியாபாரிகளுக்கு எதிரிகள் வகையில் தொல்லைகள் தலைதூக்கினாலும்அதை குருவால் முறியடிக்கலாம். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். அதன்மூலம் வளர்ச்சியை அடையலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பார்த்த பலனை பெற்று முன்னேற்றம் காண்பர். உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெற்று புகழ், பாராட்டு கிடைக்க பெறுவர். பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு வரும்.சிலர் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் குருவால் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடு -க்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் உளுந்து, துவரை, கொண்டைக் கடலை சோளம், மஞ்சள் கேழ்வரகு, சோளம் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம் வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்- வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெற்று குதூகலம் அடைவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.
உடல்நலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்: விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
ராகு,கேது சாதகமற்ற பலனை தந்தாலும் குருபகவான் குடும்பத்தில் குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். மதிப்பு, மரியாதை இருக்கும். மேலும் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
உத்தியோகம்: வளர்ச்சி காணலாம்.வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். உங்கள் செல்வாக்குக்கு எந்த குறையும் இருக்காது. சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.
ஐ.டி. துறையினர்களுக்கு மேல் அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.
வக்கீல்கள் பண விஷயத்தில் கவனம் தேவை. அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மருத்துவர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
வியாபாரம்: பகைவர்களின் தொல்லைகள் உங்களுக்கு தடையைத் தந்தாலும் பொருளாதார வகையில் எந்த பின்தங்கிய நிலையும் வராது. அதிக முதலீடு செய்ய வேண்டாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இருப்பினும் சனியின் அனைத்தும் பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பகைவர்களின் இடையூறு -களை உடைத்தெறிவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வியாபாரிகளுக்கு தொழில் வளர்முகமாக இருக்கும்.பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
தரகு,கமிஷன் தொழில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக் -கும். சமூகநல சேவகர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். பணப் புழக்கத்திற்கும் குறை இருக்காது.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். நற்பெயர் கிடைக்கும் கல்வியில் சிறப்படைவர். பல்வேறு போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகுவழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாலம். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். நற்சுகம் ஏற்படும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பா இருக்கும்.
உடல் நலம் பயணத்தின்போது கவனம் தேவை.
வழிபாடு: ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.வீட்டிலேயே துர்க்கைக்கு பூஜை செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளை வழிபட்டு ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவுங்கள்.