Guru peyarchi Palankal 2023/ Kumbam Rasi/ Aquarius
அடுத்தவரின்மனதைஎளிதில் அறிந்து கொள்ளும் ஆற்றல் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் பிறரின்குறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவீர் -கள்.குருபகவான்இது வரை உங்கள் ராசிக்கு2-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்தார். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை சரண் அடையும் நிலை ஏற்பட்டு இருக்கும். பகைவர்களின் சதி தவிடுபொடி ஆகி இருக்கும். மனதில் துணிச்சல் பிறந்து உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருந்து இருக்கும். வியாபாரம், வணிகம் நல்ல லாபத்தைக் கொடுத்து இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மனநிம்மதியோடு பணியாற்றி இருப்பீர்கள். சிலர் புதிய பதவி பெற்று இருப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடிஇருக்கும். வீடு, மனை வாங்கி இருக்கலாம். இப்போது குருபகவான் 3-ம் இடமான மேஷ ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. அதாவது துரியோதனனின் ஜாதகத்தில் 3-ல் குரு இருக்கும் போது அவனது படை தோல்வி அடைந்தது என்பதாகும்.அந்தஅளவுக்கு மோசமான பலன்கள் உங்களுக்கு நடக்குமோ என்ற அஞ்ச வேண்டாம். ஏனெனில் அந்த சூழ்நிலை வேறு, இன்றைய உங்களின் நிலை வேறு. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படியானால் குருவால் பிற்போக்கான பலன்கள்தான் நடக்குமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. குருவின் பார்வைக்கும் கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். மேலும் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்- களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சனிபகவான் தற்போது 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார்.அவரால் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம். வெளியூர்பயணம் ஏற்பட்டிருக் -கும்.எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வந்திருக்கலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந் -தாலும் அவரின்7-ம் இடத்து பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தை கொடுத்திருப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைத்திருக்கும். முயற்சிகளில் வெற்றியை தந்திருப்பார். உங்கள் ஆற்றல் மேம்பட்டிருக்கும். இந்த நிலையில் சனி 20-12-2023 அன்று 12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டு காலம் உடல்நலம் பாதிக்கப்படலாம், உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அதிக நன்மை கிடைக்கும்.
ராகு 3-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு சாதகமானது என்பதால் பல்வேறு நன்மைகளை தருவார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும்தருவார்.குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் கொடுப்பார். அவர் 8-10-2023 அன்று 2-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட் -களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால் ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு11-ம் இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
கேது தற்போது 9-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார்.அங்கு அவர் நன்மை தரமாட்டார்.அவரால் முயற்சிகளில் தோல்வி ஏற்படும். பொருள் நஷ்டம் வரலாம். உடல் ஆரோக்கியம் குறையலாம். .அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப் பார்வை -கள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சி- னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன்மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அவர் 8-10-2023 அன்று கேது 8-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல் நலக் குறைவு முதலியன வரலாம்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனைக் காணலாம்.
குருபகவானின் அனைத்து பார்வைகளால் பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம்.எடுத்த காரியத்தை துரிதமாக முடிப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். மதிப்பு, மரியாதை, கவுரவம் மேம்படும். ஆனாலும் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். முக்கிய பொறுப்புகளை குடும்ப- த்தில் உள்ள பெரியோர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
குடும்பத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். குருபார்வையால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
உத்தியோகம் வேலையில் கவனமாக இருக்கவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற -வற்றுக்கு தடையில்லை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.குருபார்வையால் மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
ஆசிரியர்களுக்கு வேலையில் அதிக பளுவும் அலைச்சலும் இருக்கும். ஆனாலும் குருவின் பார்வையால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். வக்கீல்கள் பண விஷயத்தில் கவனம் தேவை. அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். மருத்துவர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும்.
வியாபாரிகளுக்கு எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். எப்போதும் அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. ஆனாலும் உங்கள் புத்தியால் அதை முறியடித்து வெற்றி காணலாம். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். போட்டியாளர்கள் வகையில் இடையூறுகள் வரலாம். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்.
மாணவர்கள் அசாதாரணமாக இருக்க வேண்டாம்.குருவின் பார்வையால் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகள் அதிக முதலீடு போடும் விவசாய பயிரை தவிர்க்கவும்.அதிகமாக உழைக்க வேண்டிய -திருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. வீட்டினுள் இருந்த சிற்சில பிரச்சினை, உறவினர்கள் வகையில் ஏற்பட்ட மனக்கிலேசம் பொருள் இழப்பு முதலியன குருவின் பார்வையால் மறையும். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கை நிறைவேறும்.
உடல் நலம் சுமாராக இருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
பரிகாரம்- சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரை வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். ஆஞ்சநேயரை வழி பட்டால் அச்சம் நீங்கி கூடுதல் பலனைப் பெறலாம். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
இந்த காலக்கட்டத்தில் ராகு-கேது இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் பொன்,பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும்,ஆனந்தமும் இருக்கும்.பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. மதிப்பு, மரியாதை சீராகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே பொறுமை- யும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்..உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் குரு, சனி பார்வைகளால் அதை எளிதில் முறியடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.அவர்களால் பொருள் சேரும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உத்தியோகம்- பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்பு -களை தட்டிகழிக்காமல் செய்யவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். அதே நேரம் உழைப்புக்கு தகுந்த வருவாய் கிடைக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சனிபகவானின் பார்வையால் மருத்துவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். சிறுதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். உங்கள் திறைமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்து ஓங்கும்.தங்கம்,வெள்ளி,வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 11-9-2023 முதல் 4-12-2023 வரை திருட்டு களவு போன்றவை இடர்பாடுகள்வர வாய்ப்பு உண்டு. டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர்.தொழில் நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.கூட்டாளிகளின் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். தரகு, கமிஷன் தொழில் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள் புகழும், பெருமையும் கிடைக்க பெறுவர். எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. பொதுநல சேவகர்கள் நல்ல வசதியுடன் இருப்பர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் புதிய வழக்கு- களில் சிக்க வேண்டாம்.
மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். நல்ல மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பு தொடரும். விரும்பிய பாடம் கிடைக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை சிரத்தை எடுத்து படிக்கவும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகளுக்கு மஞ்சள், கரும்பு, எள், பனை போன்ற பயிர் வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கூலி வேலைகள் செய்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவர். 11-9-2023 முதல் 4-12-2023 வரை கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.
பெண்களுக்கு தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி பெருகும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட-வேண்டிய திருக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உடல்நலம் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.
பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். கேதுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.