அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி
மதுரை அருகே அழகர் கோவிலில் கள்ளழகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பக்தர்கள் வணங்குகிறார்களோ அந்த அளவுக்கு அங்கு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த கோவிலின் பிரதான கோபுர வாசல் எப்போதும் அடைத்தே இருக்கும். சாத்தப்பட்டிருக்கும் அந்த கதவைத்தான் கருப்பணசாமியாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்த கதவை திறந்து பார்த்தால் அதனுள் பதினெட்டு படிகள் இருக்கும். அதனால்தான் பதினெட்டாம்படி கருப்பணசாமி என்று அழைக்கிறார்கள்.இந்த தெய்வம் வடக்கில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே […]
Continue Reading