மகாவிஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்தது ஏன்?

Kurma Avatharam/ Kurma nathar temple/ கூர்்ம அவதாரம்/ கூர்ம நாதர் கோவில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு காரணத்தி்ற்காக எடுக்கப்பட்டது. அதன்படி இந்த கூர்ம அவதாரத்தை ஏன் மேற்கொண்டார் என்ற புராண வரலாறை காணலாம்.தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி மோதல் உருவாகும். ஒரு முறை ஏற்பட்ட சண்டையில் அசுரர்கள் வெற்றிமுகமாக இருந்தனர். இந்திரலோகத்தையே தங்கள் வசம் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர். அதற்கு […]

Continue Reading

வேலை பெற்றுத்தரும் மாங்காடு வழிபாடு

Maankadu – Worship available at Jobதற்போது வேலை இல்லாமல் பலர் அவதிபடுகின்றனர். சிலருக்கு படிப்புக்கு தகுதியான வேலை கிடைப்பது இல்லை. அவர்கள் வேலை கிடைக்க சென்னை அருகே உள்ள மாங்காடு சென்று வந்தால் கண் கண்ட பலன் கிடைக்கும். அவர்கள் தொடர்ச்சியாக 6 வாரம் செவ்வாய்க்கிழமை சென்று அம்மனை வழிபட வேண்டும். அதே போல் திருமணம் கைகூட செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தொடர்ந்து 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் நல்ல வரனாக […]

Continue Reading

அரசியல் செல்வாக்கு பெற வைக்கும் பிளாஞ்சேரி கோவில் யாகம்

Blancheri temple sacrifice to gain political influence14.6.2021 ஒரு சமயம் உலகத்தில் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது உலகை காக்க வேண்டி முனிவர்கள் அனைவரும் சிவனை நோக்கி தவம் புரிய தொடங்கினார்கள். அவர்கள் இப்படி தவம் இருந்த இடம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் என்ற இடம். எல்லா முனிவர்களும் தவம் இருந்த இடத்திற்கு சற்று தாமதமாக பிராச முனிவர் வந்தார். தாமதமாக வந்ததால் அவரை மற்ற முனிவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபம் […]

Continue Reading

அத்திரிமலையில் மூலிகையாக மாறிய ஊர்வசி

Urvasi turned into an herb in Athirimalai 14.6.2021தற்போது சித்தர்கள் வழிபாடு பொது மக்களிடையே பரவலாக பரவி வருகிறது. மனிதர்கள் உடல் நலத்தோடு மட்டுமின்றி நல்ல மனநலத்தோடு வாழ பல்வேறு வழிகளை கண்டுபிடித்து கொடுத்த விஞ்ஞானிகள். நோயின்றி வாழ மூலிகைகளை கண்டு பிடித்து அதை உண்ணும் விதத்தையும் எடுத்துக் கூறினார்கள். மேலும் மனவலிமை பெற தியான முறைகளையும் அவர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி சொன்னார்கள்.அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு வசதியான இடமாக மலைப்பகுதியை தேர்ந்து எடுத்தார்கள். அப்படி […]

Continue Reading

திருச்செந்தூரின் நாழிக்கிணறு

திருச்செந்தூரின் தனிச்சிறப்பு அங்குள்ள நாழிக்கிணறுதான். திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு. சூரனை, முருகன் தனது வேலால் வதம் செய்ததார். அந்த வேலுக்கான தோஷகத்தை போக்க முருகப்பெருமான் கங்கையை வரவழைத்தார். அதுதான் நாழிக்கிணறு. நாமும் அந்த நாழிக்கிணற்றில் குளித்து பின்னர் கடலில் நீராடி முருகப்பெருமானை வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். கடலில் நீராடிய பின்னர் வேறு தண்ணீரில் குளிக்காமல் முருகனை வணங்க வேண்டும்.

Continue Reading

பிரதோஷ வேளையில்…

பிரதோஷத்தின்போது எல்லா தெய்வங்களும், தேவர்களும் சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை வணங்குவதாக ஐதீகம். அந்த நேரத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். மேலும் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால் ஓராண்டு கோவிலுக்குச் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனி பிரதோஷம் அன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஐந்து ஆண்டுகள் கோவிலுக்குச் சென்ற வழிபட்ட பலன்கள் கிடைக்கும். பிரதோஷ வேளையில் சாப்பிடுதல், தூங்குதல், எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடாது.

Continue Reading

கழுதை வழிபட்ட தலம்

கழுதை என்று அந்த விலங்கை அலட்சியப்படுத்த வேண்டாம். கும்பகோணம் அருகே திருவாரூர் சாலையில் வடகண்டம் அருகே கரையபுரம் என்ற ஊரில் உள்ள சிவனை கழுதை வழிபட்டு பேறுபெற்றது-. இந்த ஊருக்கு கரவீரும் என்று பெயர். கரம் என்றால் கழுதை என்று அர்த்தம். இங்குள்ள சிவனுக்கு கரவீரேசுவரர் என்றும் அம்மனுக்கு கரவீரநாயகி என்றும் பெயர். இத்தலத்தில் கவுதம முனிவரும் வணங்கி அருள் பெற்றார். இத்திலத்தின் மரம் அலரி.

Continue Reading

தண்ணீரில் விளக்கு ஏற்றியவர்

திருவாரூருக்கு அருகில் ஏமப்பேரூரில் நமிநந்தியடிகள் என்பவர் பிறந்தார். அவர் திருவாரூர் கோவிலில் உள்ள அரநெறியப்பர் சன்னதியில் உள்ள சிவனுக்கு தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வந்தார். இந்த சன்னதி திருவாரூர் கோவிலின் இரண்டாவது சுற்றில்தென்புறம் உள்ளது. இங்குள்ள சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஒருநாள் விளக்கு ஏற்ற நெய் கிடைக்காததால் நமிநந்தியடிகள் சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தண்ணீரை ஊற்றி விளக்கு எரித்தார்.

Continue Reading

நேந்திரம் வாழைக்கு பெயர் வந்தது எப்படி?

கேரளாவில் உள்ள திருகாட்கரை தலத்தில் வாமண கோலத்தில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். ஒரு காலத்தில் இந்த பகுதியில் தணிகன் என்ற விவசாயி வாழை மரங்களை நட்டு பயிரிட்டு இருந்தார். ஆனால் அந்த மரங்கள் சரியாக காய்க்கவில்லை. இதனால் வேதனை அடைந்த தணிகன் தன் தோட்டத்தில் வாழைமரங்கள் செழிப்பாக காய்த்து வருமானத்தை தர வேண்டும் என்று வேண்டி தங்கத்தால் வாழைகுலை செய்து கோவிலுக்கு காணிக்கை செலுத்தினான். அதன்பின் அவன் தோட்டத்தில் விளைச்சல் சிறப்பாக இருந்தது.நேர்த்திகடனாக தங்க வாழைத்தார் கொடுத்தார். நன்றாக […]

Continue Reading

கருடாழ்வார் இல்லாத பெருமாள் கோவில்

எல்லா பெருமாள் கோவிலிலும் மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்பநாபன் கோவிலில் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.

Continue Reading