கிராம ஊழியர்கள் பணி நியமனம் செய்ய அமைச்சரிடம் திமுக நிர்வாகி கோரிக்கை

மாத இதழ்கள்

DMK executive requests the minister to appoint village workers

25.10.2024

தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனிடம் தென்காசி நகர 1:வது வார்டு திமுக செயலாளரும், முன்னாள் திமுக நகர் மன்ற உறுப்பினரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அயலக அணியின் மாவட்டத் துணை அமைப்பாளருமான த.ராமராஜ் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் வருவாய்த்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

தமிழகத்தில் நமது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நமது முதலமைச்சர் நாள்தோறும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியதோடு தமிழகத்தை இந்தியாவில் சிறந்த மாநிலமாக மட்டுமன்றி , தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளை பாராட்டும் வகையில் தமிழ்நாட்டு வாக்காள பெருமக்களும் பொதுமக்களும் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் , பாராளுமன்ற தேர்தல், மற்றும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து அமோக வெற்றி பெற செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராமநிர்வாக அலுவலகங்களில் கிராம ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது இதனால் கிராம நிர்வாக அலுவலக பணிகள் சிறப்பாக நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி கிராம மக்கள் மத்தியில் நமது அரசுக்கு எதிரான மனநிலையை எதிர்க்கட்சியினர் உருவாக்க முயற்சி செய்கின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடங்களில் தகுதி வாய்ந்த நபர்களை பணி நியமனம் செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு தென்காசி தெற்கு மாவட்ட திமுக அயலக அணியின் மாவட்டத் துணை அமைப்பாளரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலக மேலாளருமான த.ராமராஜ் அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை மனிதனைப் பெற்றுக் கொண்ட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மனுவினை கவனத்துடன் படித்து இது பற்றி முதலமைச்சரிடம் கலந்து பேசி தமிழகம் முழுவதும் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் காலியாக உள்ள கிராம ஊழியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே விரைவில் கிராம ஊழியர்கள் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பு,:- சார் இது விளம்பர செய்தி அவசியம் படத்துடன் வெளியிட வேண்டுகிறேன்

One attachment
• Scanned by Gmail