Guru peyarchi Palankal 2023/ Meenam Rasi/ Pisces
உங்கள் ராசியின் சின்னம் மீன். அது எவர் பிடியிலும் சிச்காமல் வழுக்கி ஓடும் தன்மை உடையது. அதைப் போல் நீங்களும் எந்த பிரச்சினை -யிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். குருபகவான் இது வரை உங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத் -தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் தான் குருபகவான் 2-ம் இடமான மேஷ ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.ஆனால் அவர் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் முக்கிய கிரகமான சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார்.இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தந்திருப்பார்.அவரால் பொன், பொருள் கிடைத்திருக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரித்திருக்கும். பெண்களால் முன்னேற்றம் காணடிருக்கலாம்.ஆனால் சனி 20-12-2023அன்று 12-ம் இடமான கும்ப ராசிக்கு வருகிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை கொடுக்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனி ஆரம்ப காலம். சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு. இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் அவர் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்து பார்வை சிம்மத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேபடும்.
நிழல்கிரகமான ராகு 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார்.இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையையும், தூரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம் .ராகுவின் பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். ராகு 8-10-2023 அன்று உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சுமாரான நிலைதான். இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார்.
கேது 8-ம் இடமானதுலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு கேதுவால் விபத்து பயம், செயல்முடக்கம், உடல்நலக்குறைவு முதலியன வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள்வரலாம். அவர் 8-10-2023 அன்று 7-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் உகந்த இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்தது போல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். வீண்மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனைக் காணலாம்.
குரு,சனிபகவானால் சிறப்பான நிலையை காணலாம். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடிவரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். குருவால் ஏற்பட்டு வந்த மனக்கவலை, சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன மறையும். உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
உத்தியோகம் வளர்ச்சி காணலாம். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். கோரிக்கைகள் நிறை வேறும்.சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பதவிஉயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரி -க்கும்.சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். அல்லது விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கப்பெறலாம். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசுஊழியர்களுக்கு திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆசிரியர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும், மதிப்பும் கிட்டும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். வக்கீல்கள் எதிர்பாராத பணவரவு இருக்கும். வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகள் பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.தொழில் விஷயமாக ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகாது. இரும்பு தொடர்பான தொழில் நன்கு வளர்ச்சி அடையும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். வெளியூர் பயணம் ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறு அவ்வப்போது வரலாம் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
தரகு,கமிஷன் தொழில் அதிக கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட வேண்டும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். .எதிர்பார்த்த புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல வசதியுடன் இருப்பர். எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். அரசியல்வாதிகள் புதிய பதவிகள் பெற்று சிறப்பான பலனை காண்பர். நல்ல பெயர் எடுப்பர்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுஅறிவு வளரும் நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறலாம். கெட்ட சகவாசத்திற்கு விடை -கொடுப்பர்.
விவசாயிகள். பாசிபயறு நெல், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். நவீன விவசாயத்தை பயன்படுத்தி வளம் காணலாம். வழக்கு விவகாரங் -கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள் கடந்த காலத்தைவிட நன்மைகள் அதிகரிக்கும். பல்வேறு முன்னேற்றங்களை காண- லாம். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். பெரியோர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பொன், பொருட்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். குழந்தை -களால் பெருமை கிடைக்கும். விருந்து, விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்..பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலம் சிறப்படையும். கண் தொடர்பான உபாதை பூரண குணம் ஆகும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்: நவக்கிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
இந்த காலக்கட்டத்தில் ராகு-கேது இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவைஇல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் அவர் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார்.மேலும் குருபகவானின் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும். சனிபகவான் டிசம்பர் 20-ந் தேதி வரை மகரத்தில் நின்று நற்பலனை கொடுப்பார்.
கணவனின்அன்பு கிடைக்கும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். உறவினர்வகையில் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருவால் துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உருவாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்க பெறுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் பெறுவர்.
உத்தியோகம்: முன்னேற்றம் காணலாம். சம்பள உயர்வு வரும்.விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். ஐ.டி. துறையினர்கள் உன்னத பலனை எதிர்பார்க்கலாம்.ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர்.வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆசிரியர்கள் பதவி உயர்வு காண்பர். உத்தியோகத்தில் மதிப்பு இருக்கும். முக்கிய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிக் கொள்ளவும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை வேலையில் .பொறுமையும், நிதானமும் தேவை. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். மேல்அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வக்கீல்கள் பண விஷயத்தில் கவனம் தேவை. அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். மருத்துவர்கள் பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் சனியின் பார்வையால் வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
வியாபாரம்: சிற்சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய இருக்கும். பணவிரயம் ஏற்படும். எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. குருவால் நல்ல லாபத்தை பெறலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். இருப்பினும் சனியின்7-ம் இடத்துப் பார்வையால் தொழில்அதிபர்களுக்கு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம்.
தரகு,கமிஷன் தொழில் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
பொதுநலம்: அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டிய- திருக்கும்.கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும்,மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். சமூகநலசேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்க பெறுவர்.
மாணவர்கள்: ஆசிரியர்களின் ஆலோசனையும் அறிவுரையும் கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். 11-9-2023 முதல் 4-12-2023 வரை சற்று முயற்சி எடுத்து படிக்கவும்.
விவசாயம்: அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்கள் நல்ல பலனை காணலாம். மஞ்சள் மொச்சை, கடலை, நெல் போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகுவழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன்மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவனின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்.வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
உடல்நலம் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதை -கள் வரலாம். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும்.
பரிகாரம்: ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு மிகவும் உயர்வை தரும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.