Guru peyarchi Palankal 2023/ Simmam/Leo
Guru peyarchi Palankal 2023/ Simmam/Leoதன்னம்பிக்கையே வாழ்கையில் முன்னேற்றத் -திற்கு வழிகாட்டி என்பதை உணர்ந்துள்ள சிம்ம ராசி அன்பர்களே! குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள்அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குருபகவான் 9-ம் இடமான மேஷ ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள்.அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவான் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார். மற்றகிரகங்களின் நிலை கோச்சாரபலனை கணிக்கும்போது, மற்ற முக்கிய கிரகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கிய கிரகங்களில் ஒன்றான தற்போது சனிபகவான் 6-ம் இடமான மகர ராசியில் நின்று பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்திருப்பார். நல்ல பணப்புழக்கத்தை கொடுத்திருப்பார். அபார ஆற்றல் பிறந்து இருக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிஇருப்பீர்கள். மேலும் சனியின்10-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரியஅனு- கூலத்தையும் தந்திருப்பார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்திருப்பார். இந்த நிலையில் 20-12-2023 அன்று சனிபகவான் 7-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல.அவரால் முன்பு போல் நற்பலனை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். நிழல் கிரகமான ராகு தற்போது 9-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். இதற்காக கவலைகொள்ள தேவைஇல்லை காரணம்அவரது 4,7,மற்றும்11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அவர் 8-10-2023அன்று 8-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். கேது தற்போது 3-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம். அங்கு அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். 8-10-2023அன்று கேது 2-ம் இடமான கன்னி ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு11-இடமான மிதுனத்தில் விழுகிறது.இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பெரியோர்களின் ஆதரவும்,ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள்.கேதுவால் கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். உத்தியோகம்; எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஆசிரியர்கள் எதிர்பாராத வகையில்பலநன்மைகள் கிடைக்க பெறலாம்.மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அலைச்சல், வேலைபளு குறையும். வக்கீல்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தானேகாரியத்தை சாதிக்கலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மருத்துவர்கள் வேலையில் திருப்தி காண்பர். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண்களை பங்கு- தாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில் -களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கி-யவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். மேலும் குருவின் பார்வையால் பணவரவு கூடும். பகைவர்களின்சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது. பொதுநல சேவகர்கள் நற்பலனை காணலாம்.அவர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக்காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது மாணவர்களுக்கு குருவால் கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும். போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயம்: நவீன இயந்திரங்கள்வாங்க வாய்ப்பு உண்டு.புதியதொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர்.மஞ்சள், சோளம், கேழ்வரகு, கொண்டைக் கடலை,தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. கோழி,ஆடு வளர்ப்பில் வருமானத்தைப் பெறுவர். பெண்கள் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். வசதிகள் பெருகும். தோழிகள் உதவி-கரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும்.உங்களால் குடும்பம் சிறக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உற்சாகமான நிலையை அடைவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். தங்கள் கோரிக்கை -களை கேட்டு பெற்று கொள்ளவும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். தனியார்துறையில் வேலை பார்ப்பவர்கள் எதிர்பார்த்த பலனை பெற்று முன்னேற்றம் காண்பர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். உடல்நலம்:சிறப்பாக இருக்கும். வாயு தொடர்பான உபாதை பூரண குணம் அடையும். பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள். அதிகாலையில் விளக்கு ஏற்றுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பல வண்ண நிற துணிகளை கொடுத்து வாருங்கள். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வீட்டினுள்சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை.உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும்.சற்று ஒதுங்கி இருக்கவும்.ஆனால் குரு நற்பலனை தருவார்.அவர் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் குரு உயர்வை தருவார். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். ஆனால் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களு -க்கு வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.அதிக முயற்சிஎடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். இருப்பினும் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.11-9-2023 முதல் 4-12-2023 வரை சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். ஆசிரியர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும் டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வக்கீல்கள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு.பண விஷயத்தில் கவனம் தேவை. அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் முன்னேற்றம் காணலாம். வெளியூர் பயணம் சிறப்பை தரும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். எது எப்படியானாலும் குருவின் பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும்.தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சிலர் தரம்தாழ்ந்தவர்களின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். கவனம் தேவை. கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.விரும்பிய பாடங்களை பெறுவர். வெற்றி பெறுவர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.11-9-2023 முதல் 4-12-2023 வரை சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். தோழிகளால் உதவி கிடைக்கும்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலரு- க்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 11-9-2023 முதல் 4-12-2023 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் இடமாற்றத்தை காணலாம். வேலையில் அக்கறையுடன் இருக்கவும். உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம். பரிகாரம்: ராகு-கேது சிறப்பாக இல்லாததால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள்.