Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Capricorn
சுயகவுரவம் கொண்ட மகர ராசி அன்பர்களே! மனைவி மற்றும் தன் குடும்பத்தினர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள் நீங்கள். குரு பகவான் இதுவரை 3-ம் இடமான மீன ராசியில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். குரு 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்- களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் உடல்நலம் பாதிக்கப்பபட்டிருக்கும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வந்திருக்கலாம். வெளியூர் வாசம் ஏற்பட்டிருக்கும். ஆனால் சனிபகவானின் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளதால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தத்திருப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனி 20-12-2023 அன்று உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் மேலே சொன்ன பிற்போக்கான பலன்கள் இனி நடக்காது. சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.-இது பொதுவான விதி. இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். மேலும் சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகஉறு துணையாக இருப்பர்.
ராகு 4-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும்,சிற்சில பிரச்சினையை -யும் உருவாக்கலாம். ஆனால் ராகுவின் பின்னோ -க்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். அவர் 8-10-2023அன்று இடம் பெயர்ந்து 3-ம் இடமான மீனத்திற்கு வந்து பல்வேறு நன்மைகளை தரஉள்ளார். குறிப்பாக காரியஅனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் கொடுப்பார்.
கேது 10-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. அவர் 8-10-2023 அன்று 9-ம் இடமான கன்னி ராசிக்கு போகிறார். அதுவும் சிறப்பான இடம் அல்லதான். ஆனால் அவரால் இருந்து வந்த உடல் உபாதைகள் குணம் அடையும். அதேநேரம் கேது- வால் பொருள் இழப்பையும், காரிய தோல்வியையும் காணலாம். அவரால் பொருள் நஷ்டம் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.ஆனால் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.இதன்மூலம் தெய்வஅனுகூலம் கிடைக்கும்.உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனைக் காணலாம்.
பொதுவாக எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்துங்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையும், அறிவுரையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
குடும்பம்-வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்காது. சிறு சிறு பிரச்சினை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர்கள் வகையில் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். பண வரவு இருக்கும்.
உத்தியோகம் அதிக உழைப்பை சிந்த வேண்டிய -திருக்கும்.ஆனாலும்அதற்கான பலன் கிடைக்கா- மல் போகாது. வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிரு -க்கும்.சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை. வக்கீல்களு -க்கு செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். உங்களுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் சனிபகவானின்பார்வையால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். மருத்துவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும் . வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடும்.கவனம் தேவை. இருப்பினும் சனி பகவானின் 3-ம் இடத்துப் பார்வையால் சீரான வளர்ச்சியை காணலாம்.
கலைஞர்கள்: முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பொதுநல சேவகர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்: அசட்டையாக இருந்து விட வேண்டாம். கல்வியில் சிறக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
விவசாயம் பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்- உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.அக்கம் பக்கத்தினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். சுய தொழில்செய்து வரும் பெண்களுக்கு பொருளாதார வளம் மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும்.
உடல்நலம் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள். சனிக்கிழமை பெருமாளையும், வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபட்டு வாருங்கள். குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
இந்த காலத்தில் ராகு சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார்.கேதுசாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. இதனால் பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள்மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். சனிபகவானால் உங்களுக்கு ஏற்பட்டமன தளர்ச்சி, வீண்மனக் கவலை உறவினர்கள் வகையில் ஏற்பட்ட வீண் மனக்கசப்பு வெளியூர் வாசம் முதலியன டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குடும்பத்தில் ராகுவால் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். கேதுவின் பார்வையால் கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு வாங்குவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர். அண்டை வீட்டார்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
உத்தியோகம் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.ஆசிரியர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்பு -களை தட்டிகழிக்காமல் செய்யவும்.அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். சிரத்தை எடுத்தால்-தான் கோரிக்கைகள் நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்ற -த்தை காணலாம். 11-9-2023 முதல் 4-12-2023 வரை உத்தியோகத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை தங்கம், வெள்ளி,வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
தரகு,கமிஷன் தொழில் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு, மனக்கவலை முதலியன பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை சககலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பொதுநல சேவகர்களுக்கு புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும்.
மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கிழங்கு வகைகள், நிலக்கடலை,மற்றும் கரும்பு, எள், உளுந்து, கொள்ளு கேழ்வரகு, காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் . பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலை இருந்து வரலாம். பளுவும் அலைச்சலும் இருக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குரு உயர்வை தருவார். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்: கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட தவறாதீர்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.