Guru peyarchi Palankal 2023/ Thanusu Rasi/ Sagittarius
தனுசுவின் சின்னம் வில்-அம்பு. வில்லில் இருந்து ஏவப்படும் அம்பானது குறிப்பிட்ட குறியை நோக்கி செல்வது போல் உங்கள் குறிக்கோளும் அங்கிங்கு சிதாறதபடி நேர்கோட்டில் இருக்கும். உங்களின் குறி பெரும்பாலும் தப்பாது. குரு பகவான் இது வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னலை தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே வீண் விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டு இருக்கும்.தூரத்து உறவினர் வகையில் விரும்பதகாத சம்பவங்களும் நடந்து இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்துக்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.ஆனால்அவர் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். வக்ரத்தில் சிக்கும் போது அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுத்திருக்கலாம். பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக் கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். மேலும் சனிபகவானின் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம் இடத்துப்பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது.அதன் மூலம் நற்பலன்கள் கிடைத்திருக்கும். பொன், பொருள் கொடுத்திருப்பார். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரித்திருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருத்திருப்பர். இந்த நிலையில் சனி 20-12-2023அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.இது உன்னத நிலை.ஏழரை சனியின் பிடியில் இருந்து பூரணமாக விடுபட்டு விட்டீர்கள். அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார்.பொருளாதார வளத்தை மேம் படுத்துவார்.தொழிலில் சிறந்தோங்க செய்வார்.
தற்போது ராகு உங்கள் ராசிக்கு 5-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் இன்னல்களையும், இடையூறுகளை -யும் தரலாம். குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம்புரியாத வேதனை ஆட்டிப்படைக்-கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். 8-10-2023அன்று ராகு 4-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். அவர் 8-10-2023அன்று 10-ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
இந்த காலத்தில் குருவும், கேதுவும் பல்வேறு முன்னேற்றங்களை தருவார்கள். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படை -யும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும்.
குடும்பத்தில் வசதிகள் இருக்கும். குருவால் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிட்டும். செல்வாக்கு அதிகரிக்கும்.கணவன்-மனûவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண்களால் வீட்டில் பல்வேறு அனுகூலம் ஏற்படும். விருந்து ,விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். மேல்அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலைஇன்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.போலீஸ்,ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது.
ஆசிரியர்களுக்கு உத்தியோகத்தில் நிலவிவந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். வேலையில் இருந்த வெறுப்புணர்வு மறையும். மருத்துவர்களுக்கு பதவிஉயர்வு சம்பளஉயர்வு போன்றவை கிடைக்கும். உங்கள்கோரிக்கைளை நிறைவேற்றிக் கொள்ளலாம். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வக்கீல்கள் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
வியாபாரிகளுக்கு கடந்தகாலத்தில் எதிரிகளின் இடையூறுகள் உங்களை அவ்வப்போது பாடாய்-படுத்தி இருக்கும். இனி அந்த நிலையில் இருந்து விடுபடுவீர்கள். தடையின்றி முன்னேறலாம். உங்கள் ஆற்றல் மேம்படும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். இதனால் வீண் விரையம் தடைபடும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவர்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
கலைஞர்கள் திருப்திகரமான பலனைக் காணபர். புதிய ஒப்பந்தங்கள் பல பெற்று புகழும், பாராட்டும் கிடைக்கபெறுவீர்கள்.அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.உங்கள்செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும். பொதுநல சேவகர்கள் நற்பலனை காணலாம்.
மாணவர்கள்: அதிக வளர்ச்சியை எதிர்நோக்-கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்குச் செல்வர்.
விவசாயிகள்பாசிபயறு நெல், எள், உளுந்து, துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவர். குரு குதூகலத்தைக் கொடுப்பார். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். மேல்அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவிஉயர்வு தானாக வந்து சேரும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும். பொருள் விரயம் மறையும்.
பரிகாரம்- சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள்.
பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
இந்த காலக்கட்டத்தில் ராகு-கேது ஆகிய இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் சனிபகவான் 3-ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். மேலும் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். பொருள் சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். வெளியூர் வாசம் நிகழும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பண வரவு இருக்கும். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். சொந்த பந்தங்கள் வருகை இருக்கும்.புதியவீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். திருட்டு, களவு பயம் இனி இருக்காது.
உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வுகாண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்படலாம்.
ஐ.டி. துறையினர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மருத்துவர்கள் கூடுதல் பலன்களை காணலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும்.டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வக்கீல்களுக்கு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். கூடுதல் வளர்ச்சியை காணலாம். தொழிலில் பண வரவு இருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தானே காரியத்தை சாதிக்கலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
தொழில் அதிபர்கள் முன்னேற்றம் காண்பர். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். தங்கம்,வெள்ளி,வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு புதியவியாபாரம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். கணினித் தொழில், பத்திரிகை, இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில் -களும் சிறந்து விளங்கும். தரகு,கமிஷன் தொழில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். 11-9-2023 முதல் 4-12-2023 வரை புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.அரசியல்வாதிகள்,சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் பணப் புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள் முன்னேற்றம் காணலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். தேர்வுகள் சிறப்பா எழுதுவீர்கள்.போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
விவசாயம்: திருப்திகரமான வருவாயை காண -லாம். பாசிபயறு நெல், சோளம், எள், கொள்ளு, தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகுவழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள் துணிச்சல் பிறகும். மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர்.தோழிகள் உதவிகரமாக இருப்பர். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழிலில்ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல்நலம் கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்- நவக்கிரகங்களில் ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கைக்கு பூஜை செய்யலாம்.ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள்.