Guru peyarchi Palankal. 2023/ Thulam/Libra
துலாக்கோல் போல் எப்பக்கமும் சாயாமல் நீதியின் பக்கம் நிற்கும் துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்- கள். சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களை -யும் பெற்றிருப்பீர்கள். குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மன நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள்.இப்போது குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியா -கும். எண்ணற்ற பலவசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார். குரு 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற கிரகங்- களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண் விரோதத்தை கொடுத்திருப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகிஇருக்கும்.தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்ததன் மூலம் நன்மை கிடைத்திருக்கும். இந்த நிலையில் 20-12-2023 அன்று சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனிபகவான் 5-ம் இடத்திற்கு செல்வது கூட சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் 4-ம் இடத்தில் இருந்தது போன்ற பின்தங்கிய பலனை தரமாட்டார். 5-ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் என்பது பொது விதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும்.
நிழல் கிரகமான தற்போது ராகு 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும். அவர் 8-10-2023அன்று 6-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். இனி மேற்கண்ட இடர்பாடுகள் வராது. அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார். மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.
கேது தற்போது உங்கள் ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் அல்ல. அவர் காரிய தடையையும், உடல் உபாதையையும் தரலாம். ஆனால் அவரின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வையால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழி- காணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதாரவளம் மேம்படும்.அவர்8-10-2023 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு போகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இவரால் பொருள் விரையம் ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மீனத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பொருள் சேரும். கணவன்-மனைவி இடையே அன்பு மேல் ஓங்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்க பெறுவீர்கள். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
உத்தியோகத்தில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இடமாற்ற பீதி அடியோடு மறையும்.முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். மேல்அதிகாரிகளின்ஆதரவு இருக்கும் உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். ஆசிரியர்களுக்கு பளுவும் அலைச்சலும் குறையும். உங்களுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் போகும். ஐ.டி. துறையினர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.
வக்கீல்கள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கை -யுடன் நடந்து கொள்வது சிறப்பு. எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். மருத்துவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
வியாபாரம் நல்ல லாபம் கிடைக்க பெறலாம். உங்களுக்கு இருந்த தடைகள் விலகி முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். கேதுவின் பின்னோக்கிய பார்வையால் கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.திடீர் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்களுக்கு புதியஒப்பந்தங்கள்கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் அதிக வளர்ச்சியை எதிர்- நோக்கலாம். தேர்வுகளில் வெற்றி கிட்டும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.
விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், மஞ்சள் போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கால்நடை செல்வம் பெருகும்.
பெண்கள் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.வேலைக்கு செல்லும் பெண்கள் முன்னேற்றத்தை காணலாம். சகஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும். பெண் காவலர்கள் உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.
பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ராகுவுக்கும் கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
ராகு,குருவால் எந்த பிரச்சினையையும் முறிய- டித்து வெற்றி காண்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ராகு உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனு கூலத்தைக் கொடுப்பார். கேதுவால் பொருள் விரையம் ஏற்படலாம். குரு பல்வேறு முன்னேற்றங் -களை தருவார். பணப்புழக்கம் சிறப்படையும். பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும். 11-9-2023 முதல் 4-12-2023 வரை குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சனிபகவான் 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.அவர்களால் பொருள் சேரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.போலீஸ்,ராணுவத்தில்பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது. வேலைப்பளு, வீண் மனக்கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம்.சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.ஆசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வுக்கு தடைஏதும் இல்லை. சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.11-9-2023 முதல் 4-12-2023 வரை வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மருத்துவர்களுக்கு நல்ல பெயரும், மதிப்பும் கிட்டும். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஐ.டி. துறையில் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.
வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிரிகளின் இடையூறுகளில் இருந்து விடுபடுவீர்கள்.தடை- யின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டுவந்தர்கள் அவர்கள் பிடியில்இருந்து விடுபடுவர். இதனால் வீண்விரையம் தடைபடும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். குருவால் பகைவர்- களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.11-9-2023 முதல் 4-12-2023வரை பொருள் விரையம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு தொழில் லாபம் கிடைக்கும். கணினித்தொழில், அச்சுத்தொழில், பத்திரிகை, தரகு, ஆன்மிகம் தொடர்பாக தொழில் போன்றவை சிறப்படையும். போட்டியாளர்களால் இருந்து வந்த முட்டுக்கட்டை -கள் விலகும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.. 11-9-2023 முதல் 4-12-2023 வரை சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவால் ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.
விவசாயிகள் மஞ்சள், கொண்டைக்கடலை, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர்.நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும். பசு வளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். கோழி, ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள்.குரு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி -களை நடத்தி வைப்பார்.பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறலாம். சகோதரிகளால் பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.11-9-2023 முதல் 4-12-2023 வரை எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. வேலையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும் உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வழக்கமாக கிடைக்க வேண்டியசம்பளஉயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை.டிசம்பர்20-ந் தேதிக்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர்.
உடல்நலம் கேதுவால்பித்தம், மயக்கம் போன்ற சிற்சில உபாதைள் வரலாம்.
பரிகாரம்- விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவிகளை செய்யுங்கள். செவ்வாய்கிழமை துர்க்கை அம்மனை வழிபாடு வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.