கோகுலாஷ்டமி வழிபாட்டு

இன்றைய & நாளைய சிறப்புகள்

Kokula ashdami vazhipadu

30.8.2021
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்தான் கிருஷ்ணன். அந்தக்க கண்ணன் அவதரித்த நாளே கோகுலாட்டமி. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி 30-8-2021 திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து கண்ணனை வழிபட்டால் வீடு மகிழ்ச்சி அடையும் பிள்ளை செல்லவம் பெருகும். குழந்தைகள் நலமாக வாழ்வர்.
பூஜையின்போது கண்ணனின் உருவத்தையோ, படத்தையோ வைத்து பூஜிப்பது நல்லது. வழக்கமான நிவேத்தியங்களுடன் முருக்கு, சீடை போன்று பாதார்த்தங்களையும் படைப்பது நல்லது. மேலும் வீட்டின் வாசல்படி முதல் பூஜை அறை வரை கண்ணனின் பாதத்தை மாவினால் வரையவேண்டும். இதனால் கண்ணன் வீடு தேடி வந்து அருள்வதா ஐதீகம்.