பஞ்சராத்திரம், வைகானஸம் ஆகமங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய & நாளைய சிறப்புகள்

Learn about Pancharatram and Vaikanasam Agams

30.8.2021
மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்தான் கோகுலாஷ்டமி. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார். இதைத்தான் கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 30.8.2021 அன்று கோகுலாஷ்டமி வருகிறது.
கிருஷ்ணர் பிறந்தது ரோகிணி நடத்சத்திரம். ஆவணி மாதம் அதாவது சிம்மத்தில் சூரியன் இருக்கும்போது அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளை பஞ்சராத்ர ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினமும் கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு. இந்த ஆண்டு இந்த நாள் 31.8.2021 செவ்வாய்க்கிழமை வருகிறது.
வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற இரு ஆகமங்கள் உண்டு. பஞ்சராத்ர ஆகமம் என்பது பத்திரிகாஸ்ரமத்தில் மகாவிஷ்ணு தானே மனிதனுமாகி, அந்த மனிதனுக்கு அவர் உபதேசித்த பூஜா முறை. இந்த உபதேசம் ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் இதற்கு பஞ்சராத்திரம் என்று பெயர் வந்தது.
மகாவிஷ்ணு, வைகானஸ முனிவராக வந்து சவுனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த முறையே வைகானஸ ஆகமம் என்று அழைக்கப்படுகிறது.
அன்றைய தினம் சூரிய உதயத்தில் சப்தமியோ, கிருத்திகையே ஒரு வினாடிகூட இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் மறுநாள்தான் இந்த வைகானஸ ஸ்ரீஜெயந்தி கொண்டாடப்படுகிறது.