Progress can be seen with the holy water this month
30.4.2022
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி நாளில்தான் வைசாக மாதம் பிறக்கிறது. இந்த மாதம் முழுவதும் புனித நீராட உகந்த நாள். அதாவது மே 1-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை ஆதாவது சித்திரை 18&ந் தேதி முதல் வைகாசி 17-ந் தேதி வரை வைசாக மாதம் ஆகும். இந்த நாளில் கடல், நதி, குளம் போன்ற புண்ணி தீர்த்தங்களில் தினமும நீராடுவது சிறப்பு. மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டால் அவரவர்கள் பிறந்த நட்சத்திர நாளிலாவது புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். சிலருக்கு நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் பவுர்ணமி நாளில் நீராட வேண்டும்.
இந்த மாதம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடியால் நம்மை அண்டி இருக்கும் எல்லா தோஷங்களும் விலகும். நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். புண்ணிய தீர்த்த நீராடலுக்கு இந்த மாதம் மிகச் சிறப்பானது ஆகும்.
கிரேதா யுகம் தோன்றி நாள்
நான்கு யுகங்களில் முதல் யுகமான கிரேதாயுகம் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திரிதியை திதி நாளில்தான். அந்த நாள் மே 3&ந் தேதி வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் பரிபூர்ண ஆசி கிடைக்கும். மேலும் அன்றைய நாள் அட்சய திருதியை. எனவே அன்று புண்ணி தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட வேண்டும். மேலும் ஏழைகளுக்கு தங்களால் ஆன உதவி செய்யலாம்.