Rasi Palan for Karthikai Tamil month
மேஷம்
கடந்த மாதம் சூரியன் இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்ததால்- அலைச்சல் அதிகமாக இருந்திருக்கும். அவப்பெயர் வந்திருக்கலாம். வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு இருக்கலாம். இப்போது சூரியன் 8ம் இடம் வந்துள்ளதால் இந்த பிரச்சினைகள் இருக்காது. அதேநேரம் அரசு வகையில் அனுகூலம் இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சுக்கிரன் 8ம் இடத்தில் உள்ளதால் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புதன் 8ம் இடத்தில் உள்ளதால்- உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 3ல் செவ்வாய் இருப்பதால் -பக்தி உணர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும்.29.11.2022 அன்று புதன் 9ம் இடமான தனுசுவுக்கு செல்கிறார். அதன்பின் அவரால் மனதில் வீணான வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்க வாய்ப்பு உண்டு எனவே சற்று கவனமாக இருக்கவும். 30.11.2022 செவ்வாய் வக்கிரமாகி 2ம் இடம் வருவாதால் நன்மை தரமாட்டார். அன்று 8.12.2022 அன்று சுக்கிரன் 9ம் இடம் மாறினாலும் தொடர்ந்து நன்மை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும்.
இந்தமாதம் காலையில் சூரிய வழிபாடு நன்மையை தரும். மேலும் ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள்.
ரிஷபம் 12
சூரியன் இதுவரை 6ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்திருப்பார். குறிப்பாக- பகைவர்களை வெற்றி கொண்டிருப்பீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருந்திருக்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடியிருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருந்திருக்கும். இப்போது சூரியன் 7&ம் சென்றுள்ளதால் முன்போல் நன்மைகளை தர இயலாது. – அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 11ம் இடத்தில் உள்ள குருபகவானால் குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். 6ல் உள்ள கேது நல்ல வளத்தை தருவார்.
புதன் 29&11&2022 அன்று இடம்மாறுவதால்- குடும்பத்தில் நிலவிய குழப்பம் மறையும். மனைவி வகையில் அனுகூலம் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரலாம். மேலும் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அதேபோல் செவ்வாய் 8.12.2022 அன்று 8ம் இடம் வருவதால்- பெண்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். செவ்வாய் 30.11.2022 வக்கிரம் அடைவதால் திருட்டு பயம் இருக்காது.
நீங்கள் தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். முருகன் வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.
மிதுனம் 1
சூரியன் இதுவரை 5ம் இடத்தில் இருந்து- பகைவர்களால் தொல்லையை தந்திருக்கலாம். வியாதி தொல்லையும் இருந்திருக்கும். இப்போது 6ம் இடம் சென்றுள்ளதால் இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டலாம். மேலும்- பகைவர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெறலாம். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதன் 6-ம் இடத்தில் உள்ளதால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 11ல் உள்ள ராகு முன்னேற்றத்தை தருவார். சான்றோர்களின் ஆசி கிடைக்கும். 29ந் தேதி புதன் 7ம் இடம் செல்வதால் குடும்பத்தில் சிற்சில மனக்கசப்புகள் வரலாம். 8.12.2022 அன்று சுக்கிரன் 7ம் இடம் செல்வதால் பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.
இந்த மாதம் நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். தற்போது – குடும்பத்தை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் புதன் 29.11.2022 அன்று இடம் மாறி நன்மை தருவார்.- எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் ஈருப்பவர்கள் பதவி ஊயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
இந்த மாதம் நீங்கள் பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகள் படிக்க உதவி செய்யுங்கள்.
கடகம் சந் 1
சூரியன் இதுவரை 4ம் இடத்தில் இருந்ததால்- பெண்களிடம் விரோதம் ஏற்பட்டு பிரச்சினைகளும் வந்திருக்கலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட்டு இருக்கும். இப்போது 5ம் இடம் சென்றுள்ளதால் இந்த இடர்பாடுகள் வராது. அதே நேரம் – பகைவர்களின் தொல்லை வரலாம். 5ம் இடத்திலுள்ள சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவு ம், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் இருக்கும். புதன் 29.11.2022 புதன் இடம் மாறுவதால் குடும்ப பிரச்சினை மறையும். அவர் 6ம் இடத்திற்கு சென்றால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் ஈருப்பவர்கள் பதவி ஊயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 30.11.2022 அன்று செவ்வாய் வக்கிரம் அடைவதால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம் 12
சூரியன் இதுவரை 3ல் இருந்ததால் உங்கள்- செல்வாக்கு சிறப்பாக இருந்திருக்கும். பொருளாதார வளம் அதிகரித்து இருக்கும். தொழிலில் லாபம் சிறப்பாக இருந்திருக்கும். இனி சூரியனால் நன்மை தர இயலாது. அவர் 4ம் இடம் சென்றுள்ளதால்- பெண்களிடம் விரோதம் ஏற்படும். உடல் நலம் லேசாக பாதிக்கப்படும். 4ல் உள்ள சக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். புதன் 4-ம் இடம் வந்துள்ளதால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 6ல் உள்ள சனிபகவானால் தொழில் சிறப்படையும். விவசாயம் நல்ல லாபத்தை கொடுக்கும். 3ல் உள்ள கேதுவால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். 29.11.2022 புதன் இடம் மாறிய பின்னர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை உருவாகலாம். விட்டுக் கொடுத்துபோகவும். சுக்கிரன் 8.12.2022 சுக்கிரன் 5-ம் இடம் சென்று பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.
தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள்.
கன்னி 11
சூரியன் இதுவரை 2ம் இடத்தில் இருந்தால் – பொருள் விரயம் ஏற்பட்டிருக்கும். கண் தொடர்பான உபாதைகள் வந்திருக்கலாம். சூரியன் 3ம் சென்றுள்ளதால்- இந்த பிரச்சினைகள் இருக்காது. உங்கள்- செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்படையும். 6ல் உள்ள குருவும் சுபங்களை தருவார். மகிழ்ச்சி அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும். புதன் 29.11.2022 அன்று இடம் மாறி 4ம் இடம் வருவதால் – பகைவர்களின் இடையூறு மறையம் அரசு வகையில் இருந்த பிரச்சினையும் மறையும். பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 3ல் சுக்கிரனால்- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு ஆதிகரிக்கும். உத்தியோகதஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். 8.11.2022 அன்று சுக்கிரன் இடம் மாறி 4ம் இடம் செல்வதால் புதிய உறவுகள் வரும். அவர்களால் நன்மை கிடைக்கும்.
தினமும் முருகப்பெருமானை வணங்குங்கள். ஏழைகளுக்கு இயன்றஉதவி செய்யுங்கள்.
துலாம் ச10
சூரியன் இதுவரை உங்கள் ராசியில் இருந்ததால்- அலைச்சலும் சோர்வும் ஏற்பட்டிருக்கும். செல்வாக்கு பாதிக்கப்பட்டு இருக்கலாம். இனி இந்த நிலை இருக்காது. அதே நேரம் சூரியன் 2இடம் சென்றுள்ளதால் – பொருள் விரயம் ஏற்படலாம். கண் வலி வரலாம்.
சுக்கிரன் 2ம் இடத்ல் உள்ளதால் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அவர் 8.12.202 அன்று 3ம் இடம் சென்றாலும் தொடர்ந்து நன்மை தருவார். குறிப்பாக குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவார். உத்தியோகம் பார்ப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
இந்த மாதம் மகாவிஷ்ணுவை வணங்குங்கள். ஏழைகள் படிக்க புத்தகம் கொடுத்து உதவுங்கள்.
விருச்சிகம்& ச9
சூரியன் உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருந்தால் வீண் விரயம் ஏற்பட்டு இருக்கலாம். தொழிலில் நஷ்டம் கூட வந்திருக்கலாம். உத்தியோகத்தில் பளுவும் அலைச்சலும் இருந்திருக்கும். சிலர் இடமாற்றத்தை கண்டிருக்கலாம்.இப்போது உங்கள் ராசிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. அங்கு- அலைச்சலையும் சோர்வையும் தரலாம். செல்வாக்கு பாதிக்கபபடலாம் என்பதால் வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
உங்கள் ராசியிர் உள்ள சுக்கிரனால் -பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். குருபகவான் 5ம் இடத்தில் இருப்பதால் சுபங்கள் நடக்கும். குடும்ப நிலை மேம்பட்டு இருக்கும். மனைவி, குழந்தைகள் அனுகூலமாக இருப்பர். வேண்டிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். சுக்கிரன் 8.12.2022 2ம் இடம் சென்றாலும் தொடர்ந்து நன்மை தருவார். பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் குடும்பத்திலும் வெளியிலும் விட்டுக்கொடுத்துப்போகவும்.
நீங்கள் விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள்.
தனுசு ச8
சூரியன் இதுவரை 11ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்திருப்பார்.- மதிப்பு, மரியாதை அதிகரித்திருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்கும். அரசின் உதவி கிட்டியிருக்கும். இனி சூரியனால் நன்மைதர இயலாது. அவர் 12ம் சென்றுள்ளதால் -பொருள் விரையம் ஏற்படலாம். சில தொழிலில் நஷ்டம் உருவாகலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. 11ம் இடத்தில் கேதுவால் உள்ள- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும்.
சுக்கிரன் இப்போது சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் 8.12.2022 அன்று உங்கள் ராசிக்கு வந்து நன்மை தருவார். -பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
புதனால் எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் 29.11.2022 முதல் மறையும். ஆனால் அதற்பிறகு குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். 30.11.2022 செவ்வாய் வக்கிரம் அடைவதால் உங்களுக்கு நன்மை தருவார். புதிய சொத்து வாங்கலாம்.
நீங்கள் குருபகவானை வணங்குங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.
மகரம் சந் 6
சூரியன் இதுவரை 10ம் இடத்ல் இருந்து- நினைத்த காரியத்தை நிறைவேற்றி இருப்பார். இப்போது 11ம் இடம் சென்றாலும் தொடர்ந்து நன்மை தருவார். அவரால் – மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.
11ல் உள்ள சுக்கிரனால் -பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். உடல் நலம் சுகம் கிட்டும். 8.12.2022 அவரை சுக்கிரன் நன்மை தருவார். புதன் 29.11.2022 வரை 11ம் இடத்தில் உள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். 6- ல் உள்ள செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை- ஆபரணங்கள் வாங்கலாம். 30.11.2022 அன்று செவ்வாய் வக்கிரம் அடைவதால் அதன்பின் நன்மை தரஇயலாது-. அதன்பின் எதிரிகள் வகையில் சற்று கவனமாக இருக்கவும்.
கும்பம் ச 5
சூரியன் இதுவரை 9ல் இருந்ததால்- மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருந்திருக்காது. சிலர் அவப்பெயரை தந்திருக்கலாம். இனி இந்த பின்னடைவுகள் இருக்காது. 10-ம் சென்றபின் பல்வேறு நன்மைகளை தருவார். நினைத்த காரியம் நிறைவேறும். இதனால் வளம் காணலாம்.
புதனால்- பெண்களின் ஆதரவு ஊண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். 29.11.2022 தேதிக்கு பிறகு புதன் 11ம் இடம் வந்தாலும் நன்மை தருவார்.- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். சுக்கிரன் 10ம் இடத்தில் உள்ளதால் பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். 8.122022 அன்று சுக்கிரன் 11ம் இடம் சென்றாலும் தொடர்ந்து நன்மை தருவார். -பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். உடல் நலம் சுகம் கிட்டும். குருபகவான் 2ம் இடத்தில் இருப்பதால் உங்கள் ஆற்றல் மேம்படும். எதிரிகளின் சதி முறியடிக்கப்படும். 3ல் உள்ள ராகுவால் நல்ல பணவரவும், தொழில் வளர்ச்சியும் இருக்கும். அதேநேரம் எடுத்த காரியங்கள் நிறைவேறும்.
நீங்கள் தினமும் காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். காலையில் சூரியனை தரிசயம் செய்யுங்கள்.
மீனம் 4
சூரியன் இதுவரை 8ம் இடத்தில் இருந்தால்- அரசு வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்காது. சிலர் அதிகாரிகளால் சோதனைக்கு ஆளாகி இருக்கலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட்டு இருக்கும். இனி இந்த பிரச்சினை வராது. சூரியன் 9-ம் சென்றுள்ளதர் மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம். எனவே வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
புதன் 29.11.2022 அன்று 10ம் இடம் செல்வதால் – மனதில் இருந்த வேதனை மறையும் பொல்லாப்பு மறையும். மேலும் பெண்களின் ஆதரவு ஊண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். சுக்கிரன் 9ல் உள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். இந்த நற்பலன்கள் 8.12.2022 வரல தொடரும். 11ல் உள்ள சனிபகவானால் நன்மைகள் கிடைக்கும். தொழில் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். இதுதவிர குருவின் அனைத்துப் பார்வைகளாலும் நன்மைகள் கிடைக்கும். 30.11.2022 அன்று செவ்வாய் வக்கிரம் அடைந்து 3ம் இடம் வருகிறார். அதன்பின் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நினைத்த காரியம் வெற்றி அடையும். புதிய சொத்துவாங்கலாம்.