Swarna Gauri solves husband-wife problem
8.8.2021
ஸ்வர்ண கவுரி விரதம் புராண கதை இந்த விரத மகிமை, கந்த புராணத்தில், சுத பவுராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது.
ஒரு முறை, கந்தப் பெருமான், சிவபெருமானிடம் இந்த விரதம் இருப்பதற்கான காரணம் பற்றி கேட்ட போது விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார்.
முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் முதல் மனைவியையே அந்த அரசன் வெகு பிரியமாக நடத்தி வந்தான்.
ஒரு நாள், அந்த அரசன் வேட்டையாடக் கானகம் சென்ற போது, அங்குள்ள ஒரு குளக்கரையில் அப்சரஸ்கள் ஒரு விரதத்தை மேற்கொண்டிருந்தனர். எதனால் இந்த விரதம் இருக்கிறீர்கள் இதனால் என்ன பலன் என்று அவர்களிடம் கேட்டார் அரசன்.
அந்த தேவ பெண்கள் இது ‘ஸ்வர்ண கவுரி விரதம், இந்த விரதத்தை கௌரி தேவியைக் குறித்து 15 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பதால் எல்லா நலமும் உண்டாகும் என்று கூறி விரதம் கடைபிடிக்கும் முறையையும் சொன்னார்கள். அவர்கள் கூறியவற்றை கவனமாகக் கேட்ட அரசன், தானும் அதில் பங்கு கொண்டு விரதத்தை முறையுடன் கடைபிடித்து, 16 முடிச்சுக்கள் அடங்கிய நோன்புச் சரடைக் கையில் கட்டிக் கொண்டான்.
அரண்மனைக்குத் திரும்பியதும், தன் ராணிகளிடம், தான் அனுஷ்டித்த விரதத்தைப் பற்றிக் கூறினான். இதைக் முதல் மனைவி கேட்டு சினம் கொண்டாள். அரசனின் கையில் கட்டியிருந்த நோன்புக் கயிற்றை அறுத்தெறிந்தாள்.
அது, அரண்மனைத் தோட்டத்திலிருந்த ஒரு பட்ட மரத்தின் மீது விழுந்தது. உடனே, அந்த மரம் துளிர்க்கத் தொடங்கி விட்டது. இதைக் கண்டு அதிசயித்த அரசனின் இரண்டாவது மனைவி, உடனே, அந்த நோன்புக் கயிற்றை எடுத்துத் தன் கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கட்டிக் கொண்ட உடனே அவள் அந்த அரசனின் அன்புக்கு உரியவளாகி விட்டாள்.
முதல் மனைவி விரதம் முதல் மனைவியோ, அகம்பாவம் கொண்டு தான் செய்த தவறுக்காக, கணவனால் வெறுத்து ஒதுக்கப்பட்டாள். இதனால் மனம் வேதனைப்பட்ட முதல் மனைவியோ காட்டிற்கு சென்று, தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி, தேவியைத் துதித்துக் கொண்டே, அங்கிருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைச் சுற்றி வந்தாள். ஆனால் தேவியை நிந்திப்பவர்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்று கூறி முனிவர்கள் விரட்டினர். கவலையோடு வந்த அவளுக்கு குளக்கரையில் உள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு, அவள் அருகில் சென்றாள். ஆனால் வனதேவதையும் அவளை விரட்டவே, மனம் நொந்து சென்றாள்.
கணவன் மனைவி ஒற்றுமை தன்னுடைய கவலை தீர கௌரி தேவியைத் துதித்து, மன்னிப்பு வேண்டினால் ராணி, இதனால் கௌரி தேவி மன மகிழ்ந்து அவள் முன் தோன்றினாள். உடனே, ராணியும், கண்ணீர் மல்க தேவியைப் பலவாறு துதித்து, கௌரி பூஜையையும் விரதத்தையும் அனுஷ்டித்து, கௌரி தேவியிடம் சௌபாக்ய வரம் பெற்று நாடு திரும்பினாள். அங்கு தேவியின் அருளால், அரசன் அவளை மிகப் பிரியமுடனும், மதிப்புடனும் வரவேற்றான். இருவரும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்ந்தனர்.
இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு ஆகஸ்டு 11-ந் தேதி வருகிறது.