The long-lived history of Chitragupta
ஒவ்வொரு மாதம் வரும் பவர்ணமிக்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தோடு பவுர்ணமி சேர்ந்து வரும் நாள் சித்திரா பவுர்ணமி என்று அழைக்கிறோம். இந்த நாளில் நிலா பூமிக்கு மிக அருகில் வரும் என்பதால் பார்க்க பெரிதாக தெரியும்.
சித்தரா பவுர்மணி அன்று இரவு நிலவு ஒளியி்ல் நதிக்கரைக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் பழக்கம் உண்டு. நவீன காலத்தில் வீ்ட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.
சித்ரா பவுர்ணமி நாளையொட்டி சித்ரகுப்தர் பூஜை நடத்துவார்கள். மனிதர்களின் பாவ புண்ணிங்களை எழுதி எமனுக்கு கொடுக்கும் பணி இவருக்கு. இவர் சித்ரா பவுர்ணமி அன்றுதான் பிறந்தார். அன்றைய தினம் இவரை வணங்கினால் நீண்ட ஆயுளையும் உடல் வலிமையையும் கொடுப்பார்.
சித்ரகுப்தர் வரலாறு
சித்ரகுப்த சுவாமியின் வரலாறு நான்கு விதமாக கூறப்படுகிறது. பார்வதி அம்பாள் சித்திரம் வரைந்தார். அழகான அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.
காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்யம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.
சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். ஆரம்பத்தில் எமதர்மன் தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொண்டார். அந்த பணி கடினமாக இருக்கவே சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது அவர் அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.
இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்குத்தான் அச்செயலை ஈடேறும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார். சூரியனின் மனதுக்குள் காதல் ஏற்பட்டது. அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீளாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி நாளில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார்.
பல வண்ணத் துணி
வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாத்துவார்கள்.
சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும் எல்லா சித்திகளும் கிடைத்தன. அதன் மூலம் சித்ரகுப்தர் படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். இதனைக் கண்டு பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.
இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் தன் மகனான சித்ரகுப்தனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத் தொழில் உனக்கு உரியது அல்ல. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.
மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்திரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகியோர் தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று நினைத்து அவர்களை திருமணம் செய்து வைத்தார்.
சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார். சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் கோவில்
சித்திரகுப்பதருக்கு காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் உள்ளது. சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலுக்கும், ஸ்ரீவைகுண்டப் பெருமாள் கோவிலுக்கும் இடையில் இந்த கோவில் உள்ளது.
இக்கோவிலில், சித்திரகுப்தர் கர்ணகி அம்பாளுடன் எழுந்தருளியுள்ளார். கோவில் முன்புறம் விநாயகர் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். கோவில் உள்ளே துர்கா, நவக்கிரகம், அய்யப்பன் சன்னிதிகள் உள்ளன.
கோவில் பின்புறம் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்புகளை பெற்ற சித்திரகுப்தர் கோவிலில், அவரது பிறந்த நாளான சித்ரா பவுர்ணமி விழா, வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வழக்கம்போல்,
சித்திர குப்த பூஜை 27.4.2021 அன்று நடத்தலாம். கிராமப்புறங்களில் சித்ரகுப்தரின் வரலாறை படித்து பூஜை செய்வார்கள்.