Why put a toy in Navratri kolu?
நவராத்திரி என்றாலே அனைவருக்கும் கொலுதான் நினைவுக்கு வரும். பலர் வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் அக்கம்பக்கத்தாரை அழைத்து பூஜை செய்து பிரசாதங்களை வழங்குவார்கள். ஏதாவது ஒரு நாளில் புடவையோ ஜாக்கெட் துணியோ அன்பளிப்பாக கொடுப்பார்கள். தற்போது பெரும்பாலான கோவில்களில் பிரமாண்டமான கொலு அமைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவை மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கொலு மிகச் சிறப்பாக இருக்கும்.
ஒரு காலத்தில் கொலுவில் மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையைத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் அல்லது பல்வேறு உலோகங்களில் செய்யப்பட்ட பொம்மைகளையும் வைக்கிறார்கள்.
மண் பொம்மை வைத்தற்கான காரணம் என்ன என்பதை ஒரு புராணக் கதை மூலம் அறியலாம்.
சுரதா என்ற மன்னன் தன் எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். இதற்காக அவர் தன் குருநாதர் சுமதாவின் ஆலோசனையைக் கேட்டான். சுமதா களிமண்ணில் காளி பொம்மை செய்து வழிபடும்படி கூறினார். அதன்படி சுரதா களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அதன்பயனாக மன்னன் எதிரிகளை அழித்தான். மேலும் காளி அவன் முன் தோன்றி “ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால் உனக்கு வெற்றி கிடைத்தது. அதேபோல் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்.”
என்றாள்.
இந்த தகவல் தேவி புராணத்தில் உள்ளது. அதன்படிதான் அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்யும் பழக்கம் வந்தது.
இந்த 2021ம் ஆண்டு நவராத்திரி 7.10.2021 வியாழக்கிழமை தொடங்குகிறது.