Women worship Ramba Tiruthi to get beauty
14.5.2022
சித்திரை மாதம் அமாவாசைக்குப்பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி திதி நாளில் லாவண்ய கவுரி விரதம் இருக்க சிறந்த நாள். இந்த விரதத்தை மேற்கொண்டால் பெண்கள் அழகு பெறுவார்கள். அன்றைய தினம் விரதம் இருக்க முடியாத பெண்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபடலாம்.
இந்த விரதம் மற்றும் வழிபாட்டை மேற்கொள்ள இயலாத பெண்கள் இன்னொரு நாளிலும் விரதம் இருந்து பலன் பெறலாம். அதுதான் ரம்பா திதி நாள், வைகாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை நாள்தான் ரம்பா திருதியை என அழைக்கப்படுகிறது.
தேவலோக நடன மாதர்களில் ஒருவராக ரம்பைக்கு தன் அழகின் மீது கர்வம் ஏற்பட்டது. முனிவர்களிடமே அந்த கர்வத்தை காட்டியதால் அவர்களது சாபத்திற்கு ஆளானாள். இதனால் அவள் அழகை இழந்தாள். அழகு போனதால் வருத்தம் அடைந்த ரம்பை அந்த முனிவர்களிடம் மன்னிப்புகோரி மீண்டும் அழகை பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு முனிவர்கள் சாந்திரமானப்பட்டி ஜேஷ்ட மாதம் சுத்த திருதியை அன்று அதாவது வைகாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு திருதியை திதி நாளில் (இந்த ஆண்டு இந்த நாள் 2-6-2022 அன்று வருகிறது.) விரதம் இருந்து பார்வதி தேவியை வணங்கினால் இழந்தை அழகை பெறலாம் என்று கூறினார்கள். அது மட்டுமின்றி சாதாரண பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பார்வதி தேவியை வணங்கினால் அவர்களுக்கு அழகு மெருகூடி விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறினார்கள். அதன்படி இந்த விரதத்தை ரம்பா மேற்கொண்டு மீண்டும் அழகை பெற்றாள். அதேபோல் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டு மாலையில் சிவன்கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட வேண்டும். இப்படி செய்தால் அவர்கள் நல்ல அழகை பெறலாம். அவர்கள் மேலும் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.