வெற்றியை வரும் விஜயா ஏகாதசி விரதம்

மாத இதழ்கள்


பொதுவாக ஏகாதசி விரதம் மகத்துவம்நிறைந்தது. வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளா தவர்கள் இந்த மாதம் வரும் ஏகாதசியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாதம் வரும் ஏகாதசிகள் மகத்துவம் நிறைந்தது. எடுத்தக் காரியங்களில் தோல்வியை சந்தித்தவர்கள், படிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை பெற முடியாதவர்கள் இந்த ஏகாதசியை பயன்படுத்தி விரதம் இருக்கலாம்.
இந்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி வரும் தேய்பிறை ஏகாதசியை பால்குண பகுள ஏகாதசி என்றும் விஜயா ஏகாதசி என்றும் அழைப்பர். ராவணனை வெல்வ& தற்காக ராமபிரான் இந்த நாளில் தான் விரதம் இருந்தார். (இந்த ஏகாதசி மார்ச் மாதம் 19-ந் தேதி வியாழக் கிழமை காலை 8.34 மணி முதல் மறுநாள் 20-ந் தேதி வெள்ளிக்கிழமை பகல் 9.09 மணி வரை உள்ளது.) இந்த நாளில் சிறப்பு பூஜை செய்தால் போட்டிகளில் வெற்றி பெறலாம். மேலும் தொடங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றியை அடையலாம். அன்றைய தினம் எள், மொச்சை, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, துவரை, நெல், கோதுமை ஆகிய 7 தானியங்களை வாழ இலைகளில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கவும். மேல் இலையில் உள்ள கோதுமையின் மேல் தேங்காய் மாவிலையுடன் கூடிய கலசம் வைத்து மகாவிஷ்ணுவை பூஜித்து வணங்க வேண்டும். ஏகாதசிக்கு பிறகு துவாதசி திதி தொடங்கியம் ஒரு மகானை அழைத்து அன்னமிட்டு கலசத்தை& யும் தானியங்களையும் தட்சணை &யுடன் தானமாக கொடுக்க வேண்டும்.