வண்ணக் கோலங்களுடன் லட்சுமி பூஜை

மாசி மாத அமாவாசைக்குப்பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் பஞ்சமி திதியை ரங்க பஞ்சமி என்று அழைப்பார்கள். ரங்க என்றால் வர்ணம் என்று பொருள். அன்றைய தினம் வீடுகளில் பல வண்ணங்களால் கோலம் போட்டு லட்சுமி பூஜை செய்யலாம். இதனால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் இன்று ஆதிஷேசனுடன் கூடிய பெருமாள், வாசுகி, தட்சன், கார்கோடகன, பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகிய அஷ்டகுல நாகர்களை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும். இந்த சிறப்புக்குரிய நாள் ஏப்ரல் 2-ந் […]

Continue Reading

கருடாழ்வார் இல்லாத பெருமாள் கோவில்

எல்லா பெருமாள் கோவிலிலும் மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்பநாபன் கோவிலில் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.

Continue Reading

நீண்ட ஆயுளை தரும் நரசிங்க பெருமாள்

மதுரை அருகே யானை மலை ஒன்று உள்ளது. இந்த மலையின் மேற்குபுரத்தில் குடவரைக் கோவிலாக நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. நீண்ட ஆயுளை பெற பக்தர்கள் இந்த பெருமாளை வணங்கி வருகிறார்கள்.

Continue Reading

இம்மாத முக்கிய விசேஷங்கள்

1-3-2021 கரிநாள்2-3-2021 சங்கடகர சதுர்த்தி4-3-2021 சஷ்டி6-3-2021 வாஸ்து புருஷன்நித்திரை விட்டு எழுதல் ( நல்லநேரம் காலை 10.06 மணிமுதல் முதல் 12.42 மணி வரை)9-3-2021 சர்வ ஏகாதசி10-3-2021 பிரதோஷம், சிரவணவிரதம்11-3-2021 மகா சிவராத்திரி12-3-2021 போதாயனஅமாவாசை13-3-2021 அமாவாசை14-3-2021 காரடையார் நோன்பு( நல்ல நேரம் மாலை 3.30 மணிமுதல் 4.30)17-3-2021 சதுர்த்தி18-3-2021 கிருத்திகை19-3-2021 சஷ்டி, கரிநாள்24-3-2021 ஏகாதசி25-3-2021 வைணவ ஏகாதசி26-3-2021 மகா பிரதோஷம்28-3-2021 பங்குனி உத்திரம்,பவுர்ணமி, ஹோலிபண்டிகை, கரிநாள்

Continue Reading

சுபங்களை தவிர்க்க வேண்டிய நாட்கள்

இந்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரும் சப்தமியை திஸ்ரோஷ்டகாதி நாளாக கருதுகிறார்கள். அன்றைய தினம் முதல் 3 நாட்கள் சுப காரியங்களை விலக்குவது நல்லது. ஆனால் தர்மங்கள் செய்ய உகந்த நாள். அன்றைய தினம் தான தர்மங்கள் செய்தால் அதன் பலன் பல மடங்கு கிடைக்கும். அன்று முதல் மூன்று நாட்களுக்கு 5, 6,7- ந் தேதிகளில் சுபங்களை விலக்கி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், திலஹோமம் செய்யலாம்.

Continue Reading

நல்ல கல்வி அறிவுக்கு பாயாச வழிபாடு

தை அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியை மகேசுவர அஷ்டமி என்று அழைப்பார்கள். அன்றையதினம் பசும் பாலில் பாயாசம் செய்து தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து வழிபட வேண்டும். மறுநாளும் பாரணை செய்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் நல்ல கல்வி அறிவு கிடைக்கும். மேலும் சொர்க்க வாசமும் பெறலாம். இந்த சிறப்புக்குரிய நாள் 6-3-2021 சனிக்கிழமை வருகிறது.

Continue Reading

புத்தாண்டு பலன்கள்

பஞ்சாங்கங்கள் அனைத்தும் 60 ஆண்டுகளை கொண்ட தமிழ் ஆண்டை சித்திரை 1-ந் தேதியை தொடக்கமாக கொண்டு கணித்துள்ளனர். இந்த சித்திரை 1-ந் தேதி (ஏப்ரல் 14-ந் தேதி) சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். தற்போது விகாரி ஆண்டு முடிந்து சார்வரி ஆண்டு பிறக்கிறது. இது 34-வது ஆண்டாகும். சார்வரி ஆண்டு பங்குனி மாதம் 31-ந் தேதி திங்கள் கிழமை இரவு 7.20 மணிக்கு துலாம் லக்னத்தில் புதன் ஓரையில் பிறக்கிறது.இந்த ஆண்டு கோச்சாரபடி பெரிய கிரகங்களில் […]

Continue Reading

பங்குனி உத்திரம் சிறப்புகள்

பங்குனி உத்திரம் இந்த ஆண்டு 6-4-2020(திங்கட்கிழமை) அன்று வருகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வருகிற நாள்தான் பங்குனி உத்திரம். பொதுவாக இது பவுர்ணமியையட்டியே வரும். இந்த நாளில் பல கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். குறிப்பாக சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு – லட்சுமி ஆகியோரின் திருக்கல்யாணம் நடைபெறும். மகாலட்சுமியின் அதாவரம் நாள் உத்தரம் என்று கூறப்படுகிறது. அவர் அவதரித்ததே மகாவிஷ்ணுவை மணக்கவே. எனவே அன்றைய தினம்விரதம் இருந்து இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும். அன்றை தினம் […]

Continue Reading

நல்ல இல்லற வாழ்க்கை வேண்டுமா?

பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் துவாதசிக்கு தமனாரோபனம் என்று பெயர். அதனை விஷ்ணு தமனம் என்று அழைப்பர். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வரும் அந்த நாளில் மகாவிஷ்ணுவுக்கு மரிக்கொழுந்தினால் அர்ச்சனை செய்து வணங்கினால் புண்ணியம் கிடைக்கும். மேலும் புதன் தோஷம் உள்ளவர்கள் இந்த வழிபாட்டை நடத்தினால் தோஷம் விலகி நன்மைகள் கிடைக்கும். இந்த துவாதசி திதி தோன்றி ஒரு நாழிகை நேரம் ஹரிவாசரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் உணவு அருந்துதல் […]

Continue Reading

ஆசைகளை நிறைவேற்றும் ஏகாதசி

பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஏகாதசிக்கு காமத ஏகாதசி என்று பெயர். அதற்கு ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் ஏகாதசி என்று பெயர். அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வணங்கவேண்டும். மேலும் பெருமாள் கோயிலில் 11 விளக்குகள் ஏற்றி 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் ஆசைகள் எண்ணங்கள் நிறைவேறும். இதற்குரிய நாள் ஏப்ரல் மாதம் மாதம் 4-ந் தேதி(சனிக்கிழமை) வருகிறது.

Continue Reading