பங்குனி உத்திரம் சிறப்புகள்

பங்குனி உத்திரம் இந்த ஆண்டு 6-4-2020(திங்கட்கிழமை) அன்று வருகிறது. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வருகிற நாள்தான் பங்குனி உத்திரம். பொதுவாக இது பவுர்ணமியையட்டியே வரும். இந்த நாளில் பல கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். குறிப்பாக சிவன்-பார்வதி, முருகன்-வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு – லட்சுமி ஆகியோரின் திருக்கல்யாணம் நடைபெறும். மகாலட்சுமியின் அதாவரம் நாள் உத்தரம் என்று கூறப்படுகிறது. அவர் அவதரித்ததே மகாவிஷ்ணுவை மணக்கவே. எனவே அன்றைய தினம்விரதம் இருந்து இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும். அன்றை தினம் […]

Continue Reading

நல்ல இல்லற வாழ்க்கை வேண்டுமா?

பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் துவாதசிக்கு தமனாரோபனம் என்று பெயர். அதனை விஷ்ணு தமனம் என்று அழைப்பர். ஏப்ரல் மாதம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வரும் அந்த நாளில் மகாவிஷ்ணுவுக்கு மரிக்கொழுந்தினால் அர்ச்சனை செய்து வணங்கினால் புண்ணியம் கிடைக்கும். மேலும் புதன் தோஷம் உள்ளவர்கள் இந்த வழிபாட்டை நடத்தினால் தோஷம் விலகி நன்மைகள் கிடைக்கும். இந்த துவாதசி திதி தோன்றி ஒரு நாழிகை நேரம் ஹரிவாசரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் உணவு அருந்துதல் […]

Continue Reading

ஆசைகளை நிறைவேற்றும் ஏகாதசி

பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஏகாதசிக்கு காமத ஏகாதசி என்று பெயர். அதற்கு ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் ஏகாதசி என்று பெயர். அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வணங்கவேண்டும். மேலும் பெருமாள் கோயிலில் 11 விளக்குகள் ஏற்றி 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் ஆசைகள் எண்ணங்கள் நிறைவேறும். இதற்குரிய நாள் ஏப்ரல் மாதம் மாதம் 4-ந் தேதி(சனிக்கிழமை) வருகிறது.

Continue Reading

வசந்த நவராத்திரி

புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது, அதற்கு ஒப்பானதுதான் வசந்த நவராத்திரி. இது பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி வசந்த நவராத்திரி தொடங்குகிறது. இதனை மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

Continue Reading

வெற்றியை வரும் விஜயா ஏகாதசி விரதம்

பொதுவாக ஏகாதசி விரதம் மகத்துவம்நிறைந்தது. வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளா தவர்கள் இந்த மாதம் வரும் ஏகாதசியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாதம் வரும் ஏகாதசிகள் மகத்துவம் நிறைந்தது. எடுத்தக் காரியங்களில் தோல்வியை சந்தித்தவர்கள், படிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை பெற முடியாதவர்கள் இந்த ஏகாதசியை பயன்படுத்தி விரதம் இருக்கலாம். இந்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி வரும் தேய்பிறை […]

Continue Reading

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதரின் அருள் காட்சி

பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சீபுரம் எண்ணற்ற கோவில்களை உள்ளடக்கிய நகரம். சைவம் மற்றும் வைணவக்கோவில்கள் இங்கு பல உள்ளன. இந்த ஊரில் உள்ள முக்கிய கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. சோழர்கள் ஆட்சியில் 1018&1053 ஆண்டு காலக்கட்டத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள மூலவர் தேவராஜ பெருமாள். இவரை வரதராஜ பெருமாள் என்றும் அழைப்பர். இந்த கோவிலில்தான் தண்ணீருக்குள் அத்தி வரதர் நித்திரை கொண்டு இருப்பார். அத்திமரத்தால் செய்த வரதராஜர்(மகாவிஷ்ணு) எப்போதும் கோவில் […]

Continue Reading